40 வருட காதல் கதை
எழுந்து எப்பொழுதும் போல அலுவலகம் செல்ல தயாராகி கொண்டு இருந்தான் சேகர், அவனுடைய மனைவி இன்றும் கணவருக்கு பிடித்த உணவை தயார் செய்ய வேண்டும் என்பதற்காக மிக வேகமாக சமைத்து கொண்டு இருந்தாள்.. ஆனால், தினமும் செல்லும் நேரத்தை விட சற்று முன்னதாகவே புறப்பட்டான். இதை எதிர்பார்க்காத மனைவி "ஏன் இவ்வளவு சீக்கிரமா போகிறீர்கள்?" என்று வினவினாள்... அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லி கொண்டே கிளம்பினான்... "நேற்றே சொல்லி இருந்தால் இன்னும் விரைவாக சமைத்து இருப்பேனே, கொஞ்சம் பொறுங்கள் சமையல் முடிய போகிறது" என்றாள் மனைவி... "எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமா என்ன..? எனக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கிறது, ஒரு நாள் சாப்பிடாமல் போனால் நான் ஒன்றும் செத்து விட மாட்டேன், போய் நீ நன்றாக சாப்பிடு..!" என்று சொல்லி விட்டு விருட்டென்று வாகனத்தை எடுத்து சென்றான்... மனைவி ஏதும் சொல்லாமல் உள்ளே சென்று, சமையலை முடித்து விட்டு தானும் சாப்பிடாமல் துணிகளை துவைக்க சென்று விட்டாள்...! (சேகருக்கு ஒரு தபால் அலுவலகத்தில் வேலை. அவனுடைய மனைவி ஹவுஸ் ஒய்ப். இருவரும் காதலித்து...