Posts

Showing posts from August, 2021

புது வண்டி - படித்ததில் பிடித்தது.

படித்ததில் பிடித்த கதை டீக்கடை வாசலில் புதிய ஸ்கூட்டரில் வந்திறங்கிய நடராசு ஸ்கூட்டரை நிறுத்தியும் நிறுத்தாமலும் "ரமேசு ஒரு டீ" என குரல் குடுத்தான். "நீ மொதல்ல உள்ள வா. அப்புறம் டீ சொல்லு," என மறுகுரல் உள்ளிருந்து வந்தது. வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு உள்ளே சென்றவன், "டேய் பாஸ்கரு எப்படா பெங்களுருல இருந்து வந்த, அதும் பொதங்கிழமை அன்னிக்கி உன்ன பாக்கறதுக்கே அதிசியமா இருக்கு டா." "இன்னைக்கு காலைல தான்டா வந்தோம். பசங்களுக்கு சம்மர் ஹாலிடே. அதுமில்லாம நம்ம மாரியம்மன் கோயில் வேற சாட்டியிருக்காங்க இல்ல. அதான் நாலு நாள் லீவு போட்டுட்டு வந்துட்டேன். எப்படியும் நீ இங்க வருவேன்னு தெரியும். அதான் வீட்டுக்கு வந்ததும் நேரா இங்க வந்துட்டேன்." "ரமேசு ரெண்டு டீயா போடு" "உக்காரு ராசு," என எதிரிலிருந்த பெஞ்சை காட்டினான். அவனையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த பாஸ்கர் எதையோ எண்ணி சிரித்தான். "என்ன பாஸு, ஏஞ்சிரிக்கிற?" "இல்லடா நீ உள்ள வரும்போது வேட்டிய மடிச்சு கட்டிட்டு வந்த இல்ல, அத பார்த்தது பழசெல்லாம் ஞாபகம் வந்துச்சா அதாஞ் ...

தரிசனம்

#  கோலம் ! - ஆமருவி தேவநாதன். ''உள்ள போக முடியாது பாட்டியம்மா'' காக்கி உடை ஊழியனின் குரல் #கோலப்பாட்டிக்குப் புரியவில்லை. 91 வயதில் புரிய வேண்டிய அவசியமில்லை. ''ஏண்டாப்பா, நன்னாருக்கியா? ஒம்புள்ள என்ன பண்றான், படிக்கறானா?'' ''ஐயோ பாட்டி, அது எங்கப்பா. நான் தான் அந்தப் பையன். நல்லாருக்கேன். நீ வெளில போ, கூட்டம் சாஸ்தியா இருக்கு'' குமார் தள்ளாத குறையாகச் சொன்னான். செவிட்டுப் பாட்டிக்கி எப்பிடி சொல்றது...? ''செத்த நாழி ஆகும்கறயா? பரவால்ல, நான் நின்னு சேவிச்சுட்டுப் போறேன். பெருமாள் எனக்காக காத்திண்டிருப்பார்.'' ''பாட்டீ… உள்ள போக முடியாது. வரிசைல நிக்கணும். 3 மணி நேரம் ஆவும். நீ போயி பொறவு வா'' மென்று முழுங்கினாலும், குரல் கணீரேன்று சொன்னான் குமார். ''என்ன குமார், பாட்டிய மட்டும் உள்ள விடேன். பாவம் வயசாச்சு, கூட்டத்துல நிக்க முடியாது...'' 65 வயதுக் கல்யாணி பாட்டிக்காக கெஞ்சிப் பார்த்தாள். மாமியார் பிடிவாதம் அவள் அறிந்ததே. ''மாமி.., நீங்க சாதா நாள்ல வாங்க. வரிசைல நிக்க வாணாம். பாட்டிய சை...