புது வண்டி - படித்ததில் பிடித்தது.
படித்ததில் பிடித்த கதை டீக்கடை வாசலில் புதிய ஸ்கூட்டரில் வந்திறங்கிய நடராசு ஸ்கூட்டரை நிறுத்தியும் நிறுத்தாமலும் "ரமேசு ஒரு டீ" என குரல் குடுத்தான். "நீ மொதல்ல உள்ள வா. அப்புறம் டீ சொல்லு," என மறுகுரல் உள்ளிருந்து வந்தது. வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு உள்ளே சென்றவன், "டேய் பாஸ்கரு எப்படா பெங்களுருல இருந்து வந்த, அதும் பொதங்கிழமை அன்னிக்கி உன்ன பாக்கறதுக்கே அதிசியமா இருக்கு டா." "இன்னைக்கு காலைல தான்டா வந்தோம். பசங்களுக்கு சம்மர் ஹாலிடே. அதுமில்லாம நம்ம மாரியம்மன் கோயில் வேற சாட்டியிருக்காங்க இல்ல. அதான் நாலு நாள் லீவு போட்டுட்டு வந்துட்டேன். எப்படியும் நீ இங்க வருவேன்னு தெரியும். அதான் வீட்டுக்கு வந்ததும் நேரா இங்க வந்துட்டேன்." "ரமேசு ரெண்டு டீயா போடு" "உக்காரு ராசு," என எதிரிலிருந்த பெஞ்சை காட்டினான். அவனையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த பாஸ்கர் எதையோ எண்ணி சிரித்தான். "என்ன பாஸு, ஏஞ்சிரிக்கிற?" "இல்லடா நீ உள்ள வரும்போது வேட்டிய மடிச்சு கட்டிட்டு வந்த இல்ல, அத பார்த்தது பழசெல்லாம் ஞாபகம் வந்துச்சா அதாஞ் ...