Posts

அப்பாவுடன் பயணம்

 சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்கு பேருந்து ஏறி சில மணி நேரங்களில் என் அருகில் அமர்ந்திருந்த பயணிக்கு அடிக்கடி போன் வந்து கொண்டே இருந்தது. 'அப்பா' என்று திரையில் வரும்  அந்த அழைப்பை 'கட்' செய்து கொண்டே இருந்தார். "ஏன் கட் பண்றீங்க அப்பா தானே பேசுறார்.. பேசலாமே" என்று சொன்னேன். "சும்மா எங்கிருக்க எங்கிருக்கன்னு கேட்பாருங்க" என சற்று சலிப்போடு பதில் சொன்னார். அவரிடம் சொல்ல வேண்டுமென்று ஒன்றே ஒன்று திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டே இருந்தது. "அப்பாவெல்லாம் பேசும் போதே பேசிடனும் பின்னால பேசாமல் விட்டுவிட்டோம்னு வருத்தப்பட்டு ஒரு பயனும் இல்லை" என சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை. காரணம் சிலவற்றின் அருமையை இழந்து தான் புரிந்துக் கொள்ள வேண்டி இருக்கும். சொன்னால் யாருக்கும் புரியாது. சென்னையிலிருந்து நான் ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் குறைந்தது ஐந்தாறு முறையாவது என் அப்பா போனில் அழைத்து விடுவார். "பஸ் ஏறிட்டியா?" " சாப்டியா?" "மேல்மருவத்தூர் தாண்டிட்டியா?" "சிதம்பரம் வந்துட்டியா?" என ஏதாவது ஒன்றைக் கேட்...

அப்பாவின் மதிப்பு

மனைவி இறக்கும்போது அவருக்கு வயது 45 இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அவரை மறுமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. என் மனைவி, அவள் நினைவாக எனக்கு ஒரு மகனை விட்டு சென்றிருக்கிறாள். அவனை வளர்த்து ஆளாக்குவது ஒன்றே இனி என் வேலை. அவன் சந்தோஷத்தில் அகமகிழ்ந்து, அவன் வெற்றியில் நான் திளைத்திருப்பது ஒன்றே எனக்கு போதும். அவனுக்காக வாழ போகிறேன். இன்னொரு துணை எனக்கு தேவையில்லை என்று மறுத்து விட்டார். வருடங்கள் உருண்டோடியது. மகன் வளர்ந்து பெரியவனானதும், தன் வீட்டையும், வியாபாரத்தையும் மகனிடம் எழுதி கொடுத்து விட்டு ஓய்வு பெற்றார். மகனுக்கு திருமணமும் செய்து வைத்து, அவர்களுடனேயே தங்கியும் விட்டார். ஒரு வருடம் போனது. ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக, கொஞ்சம் சீக்கிரமாக காலை உணவு உண்ண, மருமகளிடம் ரொட்டியில் தடவ வெண்ணெய் தருமாறு கேட்டார். மருமகளோ, வெண்ணை தீர்ந்துவிட்டது என்று சொல்லி விட்டாள். மகன் அதை காதில் கேட்டவாறே தானும் உணவருந்த உட்கார, தகப்பன் வெறும் ரொட்டி துண்டை உண்டு விட்டு நகர்ந்தார். மகன் உணவருந்தும் போது, மேஜையில் வெண்ணை கொண்டு வந்து வைத்தாள் மனைவி. ஒன்று...

தான் ஆடாவிட்டாலும்...

Image
மருத்துவமனையில் பிரசவத்திற்காக தன் மனைவியை உள்ளே அனுப்பி விட்டு தவித்துக் கொண்டிருந்தான் கணவன். வீட்டில் சம்மதம் இல்லாமல் நடந்த திருமணம். அந்த பெண்வீட்டார்கள் மகள் இறந்து விட்டாள் என்றே கூறிவிட்டார்கள்.  துணைக்கு யாரும் இல்லாமலே தாய்க்கு தாயாக இருந்து அவளை கண்ணும் கருத்துமாக பார்த்து இன்று இவ்வளவு தூரத்திற்கு அழைத்து வந்த அவனுக்கு இப்பொழுது சற்று பயமாகவே இருந்தது.  ஒரு வருட காலமாக பேசாத அவன் அன்று தன் தாய்க்கு போன் செய்கிறான். "அம்மா மருத்துவமனையில் யாரும் இன்றி அனாதையாக நிற்கிறேன், உள்ளே அவள் வயிற்று பிள்ளையுடன் போராடுகிறாள் ஆறுதல் சொல்லக்கூட ஆள் இல்லா அனாதையாக நிற்கிறேனம்மா..." கேட்ட அம்மா பதில் ஏதும் சொல்லாமல் அழுதவாறே போனை கீழே வைத்து விட்டு நிற்க, அப்பா "யாரிடம் பேசினாய்" என கேட்க, அம்மா விபரத்தை சொன்னாள். சிறிய மௌனத்திற்கு பிறகு "உன் மகன் செய்த தவறுக்கு அந்த பெண் என்ன செய்வாள்? நீ போய் பார்த்து விட்டு வா.. ஆனால் நான் செத்தாலும் அவன் முகத்தில் விழிக்க மாட்டேன்" என்றார். அம்மா கிளம்பி வெளியே போன சில நிமிடங்களில்  போன் அழைப்பு வர அதை அப்பா எ...

யானைப் பாகனுக்கு யானையால் தான் சாவு என்று சொல்வாங்க...

Image
'யானை பாகனுக்கு யானையால் தான் சாவு' ன்னு சொல்லுவாங்க.  யானையைப் பழக்கும் போது, பாகனோட சொல் பேச்சு கேட்க, பயங்கர கொடூரமா அடிப்பாங்க. அதனால, யானை அந்த காயத்தோட வடுவையும், வலியையும் மனசுல ஞாபகம் வெச்சுகிட்டே இருக்கும். மஸ்து நேரத்துல வாய்ப்பு கிடைச்சு அந்த கோபம் வெளிப்பட்டு ருத்ர தாண்டவம் ஆடிரும். முக்கியமா... மஸ்து நேரத்துல, தலைமை பாகன்... யானை பக்கத்துல இருக்க மாட்டான். காரணம், யானைக்கு தன் பாகன் மேல் இருக்கும் வன்மம் வெளிப்படும் நேரம் அதுதான். ஒரு யானைய பழக்கும் போது அந்த யானைய சுத்தி நாலு அல்லது அஞ்சு கும்கி யானைகளை நிறுத்துவாங்க. ஒரு ஏழெட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன்னாடி நின்னு ஆளுக்கு ஒரு குச்சிய கீழ போடுவாங்க. பக்கத்துல ஒரு கும்கி நிற்கும். அது, எப்பிடி குச்சிய எடுத்து பாகன் கைல குடுக்கனும்னு திரும்ப திரும்ப செஞ்சு காட்டும். அவ்வளவு சுலபத்தில் புது யானை குச்சிய எடுத்துடாது. ஆனா அது எடுக்கற வரைக்கும் கும்கிகள் விடாது. புது யானைய தந்தங்களால் முட்டி நொறுக்கும். பாகன்கள் ஒன்றரை இஞ்ச் தடிமனில், ஆறடி நீளத்தில், ஒரு வாரம் விளக்கெண்ணையில் ஊறப் போட்டு தீயில் வாட்டிய, ய...

40 வருட காதல் கதை

 எழுந்து எப்பொழுதும் போல அலுவலகம் செல்ல தயாராகி கொண்டு இருந்தான் சேகர், அவனுடைய மனைவி இன்றும் கணவருக்கு பிடித்த உணவை தயார் செய்ய வேண்டும் என்பதற்காக மிக வேகமாக சமைத்து கொண்டு இருந்தாள்.. ஆனால், தினமும் செல்லும் நேரத்தை விட சற்று முன்னதாகவே புறப்பட்டான். இதை எதிர்பார்க்காத மனைவி "ஏன் இவ்வளவு  சீக்கிரமா போகிறீர்கள்?" என்று வினவினாள்... அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லி கொண்டே கிளம்பினான்... "நேற்றே சொல்லி இருந்தால் இன்னும் விரைவாக சமைத்து இருப்பேனே, கொஞ்சம் பொறுங்கள் சமையல் முடிய போகிறது" என்றாள் மனைவி... "எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமா என்ன..? எனக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கிறது, ஒரு நாள் சாப்பிடாமல் போனால் நான் ஒன்றும் செத்து விட மாட்டேன், போய் நீ நன்றாக சாப்பிடு..!" என்று சொல்லி விட்டு விருட்டென்று வாகனத்தை எடுத்து சென்றான்... மனைவி ஏதும் சொல்லாமல் உள்ளே சென்று, சமையலை முடித்து  விட்டு தானும் சாப்பிடாமல் துணிகளை துவைக்க சென்று விட்டாள்...! (சேகருக்கு ஒரு தபால் அலுவலகத்தில் வேலை. அவனுடைய மனைவி ஹவுஸ் ஒய்ப். இருவரும் காதலித்து...

ஐந்து நன்மைகள் - தள்ளுவண்டியில்

Image
வாழ்க்கை எனும் ஓடம் , அது கற்றுக்கொடுக்கும் பாடம்!! - இன்று படித்ததில் மனதை தைத்தது! ஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின் வித்தியாசமான சப்தம் என்னைக் கவர்ந்தது. “சார் என்னிடமிருந்து காய்கறிகள் வாங்கினால், சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட உங்களுக்கு ஐந்து நன்மைகள் அதிகம் அந்த நன்மைகள் என்னவென்று தெரிய வேண்டுமா”. திரும்பி பார்த்தேன். ஒரு அழுக்கு கைலியும் சட்டைக்கு பதில் தோளில் ஒரு துண்டும்அணிந்த ஒரு இளைஞன். பக்கத்தில் இருந்த சேறில் ஆறேழு வயதில் ஒரு பையன். அவன்தான் கேஷியர் என்று நினைக்கிறேன். நான் வாங்க நினைத்த என்னுடைய லிஸ்ட்டிலுள்ள அனைத்து காய்கறிகளும் இவரிடமும் இருக்கிறது. இன்று இவரிடமிருந்து வாங்கினாலென்ன?. (வீட்டுக்காரிக்கு தெரிய வேண்டாம்). “அந்த ஐந்து நன்மைகள் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா”. கண்டிப்பாக..... சார் என்னிடமிருந்து வாங்கும் காய்கறிகளுக்கு நீங்கள் ஜி எஸ் டி தரவேண்டாம். நூறு ரூபாய்க்கு ஐந்து ரூபாய் லாபம். முதல் நன்மை. சார் நீங்கள் வாங்கும் பொருட்களை கொண்டு போக நான் தரும் கவர் ஃப்ரீ... சூப்பர் மார்க்கெட்டில் இந்த கவருக்கு குற...

புது வண்டி - படித்ததில் பிடித்தது.

படித்ததில் பிடித்த கதை டீக்கடை வாசலில் புதிய ஸ்கூட்டரில் வந்திறங்கிய நடராசு ஸ்கூட்டரை நிறுத்தியும் நிறுத்தாமலும் "ரமேசு ஒரு டீ" என குரல் குடுத்தான். "நீ மொதல்ல உள்ள வா. அப்புறம் டீ சொல்லு," என மறுகுரல் உள்ளிருந்து வந்தது. வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு உள்ளே சென்றவன், "டேய் பாஸ்கரு எப்படா பெங்களுருல இருந்து வந்த, அதும் பொதங்கிழமை அன்னிக்கி உன்ன பாக்கறதுக்கே அதிசியமா இருக்கு டா." "இன்னைக்கு காலைல தான்டா வந்தோம். பசங்களுக்கு சம்மர் ஹாலிடே. அதுமில்லாம நம்ம மாரியம்மன் கோயில் வேற சாட்டியிருக்காங்க இல்ல. அதான் நாலு நாள் லீவு போட்டுட்டு வந்துட்டேன். எப்படியும் நீ இங்க வருவேன்னு தெரியும். அதான் வீட்டுக்கு வந்ததும் நேரா இங்க வந்துட்டேன்." "ரமேசு ரெண்டு டீயா போடு" "உக்காரு ராசு," என எதிரிலிருந்த பெஞ்சை காட்டினான். அவனையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த பாஸ்கர் எதையோ எண்ணி சிரித்தான். "என்ன பாஸு, ஏஞ்சிரிக்கிற?" "இல்லடா நீ உள்ள வரும்போது வேட்டிய மடிச்சு கட்டிட்டு வந்த இல்ல, அத பார்த்தது பழசெல்லாம் ஞாபகம் வந்துச்சா அதாஞ் ...